Vannappalagai 24X7
கேரளாவில் 4 தமிழர் பலி
Friday, 01 Nov 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

கேரளாவில் நான்கு தமிழர்கள் ரயில் விபத்தில் பலி. 

ஷோரனூர் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவேக விரைவு ரயில், பரதப்புழா ஆற்றுப் பாலத்தை கடக்கும் போது, பாலத்தின் மீது துப்புறவு பணிகள் செய்து கொண்டிருந்த நான்கு துப்புறவு ஒப்பந்தப் பணியாளர்கள் விபத்தில் சிக்கினார்கள். ஓடிக் கொண்டிருக்கும் விரைவு ரயில் அருகில் வந்து விட்டதால் தப்பிக்க வழியின்றி அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். 

இவர்களில் இரண்டு் ஆண்கள். இரண்டு பெண்கள். இவர்கள் நால்வரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.